பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி பள்ளிவாசலில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கப்பணி நடைப்பெற்று வந்தது.
பழைய பள்ளிவாசலை புதிய பள்ளவாசலாக மாற்றும் பொருட்டு அகற்றப்பட்டது. தற்போது புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு பணிகள் ஆரம்பக்கப்பட்டு 90 சதவித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை டிசம்பர் 30 வெள்ளிகிழமை திறப்பு விழா காண இருக்கிறது.
இப்புதிய பள்ளிவாசலுக்கு நிர்வாகிகள் அத்-தக்வா என பெயர் சூட்டி உள்ளனர்.
தக்வா என்பது அரபு மொழி சொல்லாகும். அரபு மொழியில் வலுவூட்டதல் என பொருள்படும். இறை நம்பிக்கையை வலுவூட்டும் இடம் என்பதை குறிக்கும் விதமாக அத்-தக்வா என இந்த இறை இல்லத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
நம்பிக்கையை வலுபடுத்த நாளை மட்டுமல்ல எந்நாளும் வர ஆயத்தமாகுவோம்.
