டிசம்பர் 31, 2016

விசுவக்குடியில் பள்ளிவாசல் திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் நேற்று புதிய பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. ஜமாத்துல் உலாமா சபையின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முஹம்மது முனீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை இக்ரா  தீனியாத் பாடசாலையின்  ஆசிரியர் அஹமது ஹலீல் இறைமறை ஓதி துவங்கி வைத்தார்.

விசுவக்குடி ஜமாத்தார்கள் மற்றும் அல் அமீன் இஸ்லாமிய சங்கத்தினர் முன்னிலை வகித்த இந்நிகழ்வவை  அத்-தக்வா பள்ளிவாசல் செயலாளர் முஸ்தபா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சேலம் நூருல் இஸ்லாமிய அரபு கல்லூரியின் பேராசிரியர் மௌலான மௌலவி அபுதாஹிர் கலந்து கொண்டார்.

மேலும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் மௌலவி முஹம்மது மீராசா,  அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் மௌலவி முஹம்மது சுலைமான்,  மௌலவி அப்துல் ஹை ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்நிகழ்வை இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அப்துர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். இறுதியாக அல் அமீன் இஸ்லாமிய சங்கத்தின் ஜலாலுதீன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
Previous Post
Next Post

post written by: