செப்டம்பர் 18, 2015

விசுவக்குடி இளைஞர் சவூதி அரேபியாவில் பலி (படங்கள் இணைப்பு)

விசுவக்குடியில் உள்ள ஹழ்ரத் முகமது அலி அவர்களின் மகன் ஜமால் முஹம்மது (32) சவூதி அரேபியாவில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் வபாத் ஆனார்.

இவர் சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் சவூதி அரேபியா வந்து ஒரு ஆண்டு காலம் ஆன நிலையில் இந்த சாலை விபத்து இடம் பெற்றுள்ளது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் சல்ஹசா நகரத்தில் அல் மனா மருத்துவமனை அருகில் உள்ள அடக்கஸ்தளத்தில் 18ம் தேதி வெள்ளி கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு இறுதி சடங்கு நடைப்பெற்றது.







Previous Post
Next Post

post written by: