புனித ரமலான் பெருநாளான இன்று விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி தங்களின் இனிமையான வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.
மேலும் இளைஞர்கள் அனைவரும் காஸாவில் இஸ்ரேலினால் அரங்கேற்றப்படும் கொடூரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தங்களின் ஆடைகளிலும், கைகளிலும் பேட்ஜ்களை தாங்கி இருந்தனர்.








