பிப்ரவரி 25, 2014

மட்டைப்பந்துப் போட்டி: விசுவக்குடி அணி வெற்றி

குவைத்தின் 53 வது தேசிய தினத்தை முன்னிட்டு குவைத்தில் மட்டைபந்து போட்டிகள் நடைப்பெற்றது.

குவைத் இஸ்லாமிய சங்கம் நடத்திய இப்போட்டியில் 8 அணிகள் பங்கு பெற்றன. குவைத்தில் உள்ள கைதான் பகுதியில் இன்று பிப்ரவரி 25 மாலை நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் விசுவக்குடி அணியும், மும்பை தமிழர் அணியும் நேருக்கு நேர் மோதின.

டாஸ் வென்ற மும்பை தமிழர் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட பத்து ஓவர்களில் 53 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பிறகு களம் இறங்கிய விசுவக்குடி அணி 7ஓவர்களில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Previous Post
Next Post

post written by: