ஜனவரி 16, 2014

புகைப்படமே அடையாளம்...!

காலம் கடந்தும்
வாய்த்திருக்கும்....
சுவடுகளாய்...
அழகியதோர் பள்ளிவாசல்...!

விசுவக்குடி
மகான்களின்
நினைவுச் சின்னம்...!

திண்ணம்
காக்கக் கூடியதோர்

புனிதத்தளம்...!

காலங்காலமாய்
விளங்கிடும் - ஒரு
பெரும் பொக்கிஷம்

அன்றைய...
முரசிலிருந்து இன்றைய
"ஒலி" பெருக்கிவரை...

ஒற்றுமையை
வௌிப்படுத்திடும் - இறைவனின்
உன்னத வழித்தளம்!

கட்டலாம் ஏராளம்...
புதிய கட்டிடங்கள்!
எழிலாகுமது கண்களுக்கு....!

அழிந்தால் தடையங்களின்றி
புகைப்படமே
அடையாளம்...!

பிற்காலத்தில்
சந்ததியினர் காணும்
முன்னே மறைந்து போகும்...!

விசுவாசத்தின் சிறப்புகள்
பள்ளிவாசலாகிருந்து
உணர்த்தும்!

நேசிப்போம்...!
சிந்திப்போம்...!
மாற்றுவோம்...!

பயன் தரும்
ஞானிகளாக
உருவாக்குவோம்!

பள்ளிவாசலது
பள்ளிகூடமாகலாம்
நன்மை...

இறைஞ்சி வாழ்த்திட
பாடமாக...
அமையும்...!

சொல்லிடும் விசுவக்குடி...!
விசுவாசத்தின் குடிகளாய்...
நிற்கட்டும்

சமுதாய...
வழிகாட்டலுக்கு
வழிகாட்டட்டும்

ஒற்றுமையோடு
மலரட்டும்
நம் நட்பு...

வரலாற்றில் பதியட்டும்
நம்மூரின்...
பெயர் முற்று
(aahazack@yahoo.com)
Previous Post
Next Post

post written by: