விசுவக்குடியில் தொடர் மழை பெய்ததால் ஏரிநிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை, தொடர்மழை காரணமாக விசுவக்குடி ஏரி 100 சதவீதம் நிரம்பியது.
| விசுவக்குடியில் பகுதியில் ஏரி நிறைந்து கலிங்கில் நீர் வழியும் காட்சி |
தொடர்மழையால் பச்சைமலையில் உற்பத்தியாகி வரும் கல்லாற்றிலும் தண்ணீர் அதன் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இடியுடன் பெய்த கனமழையில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
| கல்லாற்றில் இருகரைகளையும் தொட்டு செல்லும் நீர் |
