அக்டோபர் 29, 2010

விசுவக்குடியில் தமுமுக சட்ட விழிப்புணர்வு கூட்டம்



பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று (29.12.2010) நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் பிரிவான இளம் போராளிகள் பாசறையினர் சார்பாக விசுவக்குடி பள்ளிவாசல் அருகில் உள்ள பெண்கள் நிஸ்வானில் மாவட்ட துணை செயலாளர் வதூத் தலைமையில் நடைப்பபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக விசுவக்குடி பள்ளியின் இமாம் மௌலான மௌலவி முஹம்மது சுலைமான் ரஹ்மானி அவர்கள் இறைமறை ஓதி நிகழ்ச்சியை துவக்கினார். விசுவக்குடி கிளையின் செயலாளர் முஹம்மது யாசீன் வரவேற்றார். 

மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சுல்தான்மொய்தீன், விசுவக்குடி பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் செயலாளர் முஸ்தபா, பொருளாளர் அமானுல்லா, ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் தாஹிர்பாஷா கருத்துரை வழங்கினார். பின்னர் போதி கற்கை மையத்தின் தோழர் பா.பிரபாகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் அரும்பாவூர், பெரம்பலூர், முஹம்மது பட்டினம், லப்பைகுடிக்காடு பகுதிகளில் உள்ள பல இளைஞர்கள் கலந்துக் கொண்டனர். 

மேலும் தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட பொருளாளர் இலியாஸ்அலி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜஹாங்கீர் பாஷா போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை மனிதநேய மக்களி கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தௌ.மு.ஜகரிய்யா தொகுத்து வழங்கினார்.

இறுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சபியுல்லா அவர்கள் நன்றி கூறினார்.
Previous Post
Next Post

post written by: