அக்டோபர் 09, 2022

விசுவக்குடியில் கந்தூரி விருந்து


இன்று முஸ்லிம்களின் இறுதி தூதரான முகமது நபி அவர்களின் பிறந்த தினம். இந்த தினத்தை மீலாது நபி விழா என கொண்டாடப்படுகிறது. இன்று விசுவக்குடியிலும் இன்று மீலாத் நபி விழா அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் அல் ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அத்-தக்வா பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா முஹம்மது சுலைமான் அவர்கள் தலைமை ஏற்றார். லெப்பை குடிக்காடு கிழக்கு பள்ளிவாசல் இமாம் மௌலானா முஹம்மது ஆரிப் மன்பயி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

நிகழ்வுக்கு பின்னர் அனைவருக்கும் கந்தூரி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சகோதரத்துவத்துடனும், மத நல்லிணக்கத்துடனும் சுமார் 3 ஆயிரம் பேர் உணவருந்தினர்.



Previous Post
Next Post

post written by: