விசுவக்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்பயிர்களை உலர்ந்துவதற்காக காய வைக்கப்படுவது வழக்கம்.
திடீரென இன்று இரவு 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது.
ஊராட்சி நிர்வாகத்தால் பலமுறை சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்ய கோரியும் சுத்தம் செய்யாததால் பள்ளிவாசல் தெருவில் காய வைக்கப்பட்டு இருந்த சாதிக் என்பவருக்கு சொந்தமான நெல் பயிர்கள் அடைப்பின் காரணமாக தெருவில் சாக்கடை கலந்த மழை நீரில் நனைந்து அடித்துச் செல்லப்பட்டு வீணானது என வேதனை தெரிவித்தார்.
பின்னர் அவரே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை தற்காலிகமாக இரவு என்று பாராமலும், மின்தடை என்று கூட பார்க்காமலும் தற்காலிகமாக அவரே அடைப்பை சரி செய்தார்.
எனவே அன்னமங்கலம் ஊராட்சி நிர்வாகம் விசுவக்குடியில் உள்ள தூர்வாரப்படாத சாக்கடையை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





