மார்ச் 02, 2021

கடன் தொகையை உடனடியாக வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை


 



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. 

இந்த சங்கம் மூலம் அன்னமங்கலம், விசுவக்குடி, முஹம்மது பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள 6 சிறுபான்மை பிரிவை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சூழல் நிதியாக ரூபாய் 44 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கையெழுத்திட்டு கொடுத்தாக கூறப்படுகிறது.

 பிறகு கடன் வழங்குவதற்காக திருச்சியில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த கடன் தொகையை அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை மகளிர் குழுவினருக்கு வழங்கவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் சுழல் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 இதைத்தொடர்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் இந்த வாரத்திற்குள் சுழல் நிதியை சுய உதவி குழு பெண்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி நாளிதழ், பப்ளிக் ஆஃப்



Previous Post
Next Post

post written by: