ஆகஸ்ட் 15, 2019

விசுவக்குடியில் கபடி போட்டி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் பெரம்பலூர், சேலம், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. 

இறுதியில் முதலிடம் பிடித்த சமயபுரம் ஈச்சம் பட்டி அணிக்கு ரொக்க பரிசு ரூபாய் 3 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த விசுவக்குடி அணிக்கு ரூபாய் 2 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த புது ஆத்தூர் அணிக்கு ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது. 
 
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணி வீரர்களுக்கும் நற்பணி மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நன்றி: தினத்தந்தி
ஆகஸ்டு:15


Previous Post
Next Post

post written by: