ஜனவரி 07, 2019

விசுவக்குடியில் அடைப்பின் காரணமாக தேங்கிய கழிவுநீர்: குடியிருப்பு வாசிகள் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது.

இங்கு தெற்கு தெருவில் வீட்டு எண் 10/91 கொண்ட ஜமால் முஹம்மது என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பின் காரணமாக கழிவு நீர்  தேங்கி உள்ளது.

இதனால் துறுநாற்றம் வீசுவது மட்டுமில்லாமல் கொசுக்களும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட்டு இதனை சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post
Next Post

post written by: