பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் இன்று (ஜனவரி 5) சனிக்கிழமை அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் கூட்டம் நடைப்பெற்றது.
அல் ஜன்னத் சமுதாய கூடத்தின் அருகில் இரவு 9 மணிக்கு நடைப்பெற்ற இக்கூட்டத்தை மன்றத்தின் தலைவர் முபாரக் அலி தலைமை ஏற்று நடத்தினார்.
முன்னாள் நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் மன்றத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கு உதவியாக துணை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.
வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் நடைப்பெறும் கிராம சபை கூட்டத்தை விசுவக்குடியில் நடத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மன்றத்தின் உறுப்பினர் ஹஸன் முஹம்மது வரவேற்றார். இறுதியாக மன்றத்தின் உறுப்பினர் முஹம்மது ஜகரிய்யா நன்றி கூறினார்.
------------------------------------------------------------------------------
தலைவர்: முபாரக் அலி
து. தலைவர்: முஹம்மது ஆசிப்
செயலாளர்: துபைல் அஹம்மது
து.செயலாளர்: முஹம்மது ஷபீக்
பொருளாளர்: முஹம்மது அனீஸ்
இணை பொருளாளர்: நவாஸ் பாசில்
