நவம்பர் 26, 2011

விசுவக்குடியில்  பண்பு ஒழுக்க பயிற்சி முகாம்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இளம் போராளிகள் எனப்படும் மாணவரணி சார்பில்  தர்பியா எனும் பண்பு ஒழுக்க பயிற்சி முகாம் கடந்த 13.11.2011 ஞாயிறு அன்று விசுவக்குடி பெண்கள் நிஸ்வானில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் குதரத்துல்லா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரிஃபாயி அவர்கள் தலைமை பண்பு என்கிற தலைப்பில உரையாற்றினார்.
 
 மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொது செயாலளர் அப்துல் சமது அவர்கள் சமுதாய சிந்தனை என்கிற தலைப்பில் உரையாற்றினார். தமுமுகவின் மாநில உலமாக்கள் அணி செயலாளர் காரைக்கால் யூசுப் எஸ்.பி

நவம்பர் 13, 2011

"விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டம் 2012-ல் தொடங்கும்'

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்றார் பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன்.


  அன்னமங்கலம் கிராமத்தில், விசுவக்குடி - கல்லாறு பகுதியில் ரூ. 19 கோடியில் நீர்த்தேக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் தொடங்குவது தொடர்பாக, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கணேசன் மாரிச்சாமி, தமிழரசன்