மே 20, 2016

100% சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நம் பள்ளி

கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற 2016 ஆம் ஆண்டுகான +2 பொது தேர்வு முடிவுகள் நேற்று (17) வெளியிடப்பட்டது.

இதில் மாநில அளவில் 96.73 சதவீகிதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றது.

மாவட்டத்தில் உள்ள மொத்த 67 மேல்நிலைப் பள்ளிகளில் 25 பள்ளிகள் 100% சதவீகித தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில் நம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள சிறுமலர் மேல் நிலைப் பள்ளியும் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில் பா.மணிவேல் என்ற மாணவர் 1072 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

100 சதவிகித தேர்ச்சி பெற முயற்சி செய்த தலைமை ஆசிரியரையும், ஆசிரியர்களையும் பாராட்டி மகிழ்வோம்.

இப்பள்ளியின் தாரக மந்திரம்  "பக்தியாய் செபி.  அயராது உழை"  என்பதாகும்.

Previous Post
Next Post

post written by: